குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய சமன் ஏக்கநாயக்க, தற்போது ஜனாதிபதி செயலகமாக இருக்கும் பழைய பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வாறான இளம் தலைமைத்துவம் உருவாகும் என நம்புவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எதிர்கால சந்ததியினர் உறுதிபூண வேண்டும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இதன்போது தெரிவித்தார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த குஷானி ரோஹணதீர அவர்கள், ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்கு அமைய இளைஞர்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பங்கேற்க அனுமதித்தல் மற்றும் அவர்களது முன்மொழிவுகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் குழு அறிக்கைகளில் உள்ளடக்குவதற்கு அனுமதி வழங்கிய முதலாவது பாராளுமன்றம், இலங்கைப் பாராளுமன்றமாகும் எனத் தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்றம் உட்பட இவ்வாறான வேலைத்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகின்றது என பணியாட்தொகுதியின் தலைவரும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். அத்துடன், அவர் நடத்திய கேள்வி-பதில் அமர்வில் மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அதிகாரிகள் மற்றும் அதிதிகளால் ஆழமான பதில்கள் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன குருநாகல் மலியதேவ மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, பல்வேறு ஊடகங்களில் காட்டப்படுவதற்கு அப்பால் பாரிய சட்டமியற்றும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் இடம்பெறுவதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவர்களை பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறும் உதவிச் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்தார்.

இலங்கை வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களுக்கு அடைக்கலம் கொடுத்த சட்டவாக்கக் கட்டடமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த விவாதத்தை நடத்துவது மாணவர்களுக்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என குருநாகல் மலியதேவ கல்லூரியின் அதிபர் W.M.C.K. மஹமிதாவ தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க, பொதுமக்கள் சேவை அதிகாரிகளான துமிந்த விக்ரமசிங்க, ரிஷ்மியா நூட்டான், பி. ருத்ரகுமார் மற்றும் பொதுமக்கள் சேவை ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

By JF

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.