சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு.

அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை அடிக்கடி சாப்பிடுவது தானே நம் பழக்கம். அந்த வகையில், வடஇந்தியர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் கடலை மாவு குழம்பு பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்கிறோம். இந்த குழம்பில் ஏகப்பட்ட சத்துக்கள் மறைந்துள்ளனவாம். மேலும், இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். அதனால் தான் வடஇந்தியர்கள் இதனை அடிக்கடி சமைத்து சாப்பிடுகின்றனர்.

பேசின் கி கதி என வடஇந்தியர்களால் அழைக்கப்படும் கடலை மாவு குழம்பில் சேர்க்கப்படும் பொருட்களில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த குழம்பு உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது. ஒரு வேளை நீங்கள் இந்த குழம்பை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால், அதிலுள்ள சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்…

உடல் எடை குறைக்க உதவும்

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், எதை சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறை யோசித்து விட்டு தான் சாப்பிட வேண்டும். அப்படி ஒரு வேளை, உடல் எடை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருந்தால், இந்த கடலை மாவு குழம்பை தயாரித்து சாப்பிடலாம். இந்த குழம்பின் முக்கிய பொருளே கடலை மாவு தான். கோதுமை மாவை விட கடலை மாவில் சிறந்த கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாது, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஃபோலேட் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீடு ஆகியவையும் உள்ளன. இதன் காரணமாக இது எடையைக் குறைக்க உதவக்கூடியது. மேலும், இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாது இதயத்திற்கும் வலு சேர்க்கும்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரைக்கு ஏற்றது

கடலை மாவு குழம்பு, மெக்னீசியம் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். மெக்னீசியம் உங்கள் தசைகளை தளர்த்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதே நேரத்தில், அதில் உள்ள பாஸ்பரஸ் லிப்பிட் வழிமுறையை சீராக்க உதவுகிறது. இது தவிர, குறைந்த கிளைசீமிக் குறியீடானது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது

கடலை மாவு குழம்பு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முழுமையான உணவாக அமையுமாம். ஏனெனில் இதில் ஃபோலேட், வைட்டமின் பி 6 மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாக இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, பெண்ணின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி மூலம் கருச்சிதைவு அல்லது பிற பிரசவ பிரச்சனைகள் ஏற்படாமல் குறைக்க உதவுகிறது.

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.