சர்ச்சில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்ற மியான்மர் ராணுவத்திடம் கன்னியாஸ்திரி ஒருவர் கை கூப்பிக் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது

மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும், கைதும் செய்யப்பட்டனர்.

மியான்மர் ராணுவத்தின் இந்தச் செயலைக் கண்டித்து அந்நாடு முழுவதும் கடும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதை ஒடுக்க ராணுவம் தரப்பில் இணைய சேவையை முடக்குவது, துப்பாக்கிச் சூடு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருந்தாலும், மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் செல்கிறது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்றவர்களில் குறைந்தபட்சம் 60 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மியான்மர் ராணுவ வீரர்களிடம் மண்டியிட்டு கை கூப்பி கன்னியாஸ்திரி ஒருவர் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

கன்னியாஸ்திரியின் செயலை சற்று எதிர்பாராத இரண்டு ராணுவ வீரர்கள் அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரினர். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி கூறுகையில், “நான் அவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சினேன். குழந்தைகளைச் சுட்டு சித்திரவதை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினேன், அதற்குப் பதிலாக என்னைச் சுட்டுவிடுங்கள் என்றேன்” என்று அவர் தெரிவித்தார். இவரது இந்த புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது.

குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க தன்னுயிரைப் பொருட்படுத்தாத கன்னியாஸ்திரியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை மியான்மர் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல 1,600க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Source : one India Tamil

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.