Tag: Corona

கொரோனாவுக்கான முதல் மருந்தை அறிமுகம் செய்கிறது ரஷ்யா!!

கொரோனா (COVID-19) சிகிச்சைக்கு ‘அவிஃபாவிர்’ என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50%…

சுற்றுலாத்துறையை ஆரம்பிக்கும் இலங்கை

ஆகஸ்ட் இரண்டாம் திகதி இலங்கை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் சுற்றுலாத்துறையை தயார்ப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அமுலாக்கும். இதன்படி…

3000 பேருக்கு Job பறிபோனது…ஐரோப்பாவை விட்டும் வெளியேறும் Nissan!

Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…

கொரோனாவை முடிக்க ஆலையே பலி கொடுத்த பூசாரி !!

Coronavirus- கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமியே நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள்…

வங்காளதேசத்தில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

வங்காளதேசத்தில் Corona கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா…

How to control CORONA

கொரோனா – நம்மால் தடுக்க முடியும்… எப்படி?

கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்! KVC வழங்கும்…

மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை

கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள நிலையில் சிலர் பல்வேறு மருந்து வகைகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக…

எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை விரட்டலாம்..!

சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.