சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள் அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனார்

இது குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான சிஎம்எஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட ஷென்ஷோ-20 ஓடம் தியான்காங் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது. அதில் இருந்த சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூவரும், அந்த விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை சென்றனர்:

அங்கு ஏற்கெனவே இருந்த மூன்று விண்வெளி வீரர்கள், புதிதாக வந்துள்ள மூவருடன் இணைந்து ஐந்து நாள்களுக்குப் பணியாற்றிய பிறகு அங்கிருக்கும் ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் பூமிக்குத் திரும்பவர் :

இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் டாங்ஃபெங் தளத்தில் ஷென்ஷோ-19 ஓடம் வரும் 29-ஆம் தேதி தரையிறங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள மூவரும், வரும் அக்டோபர் மாதம் பூமி திரும்புவாார்கள் என்று எதிார்பார்க்கப்படுகிறது.

ஷென்ஷோ-20 விண்வெளி ஓடத்தை செலுத்தியதன் மூலம் சீனா 35-ஆவது முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பப்படுவது இது 5-ஆவது முறை.

By Admin

Leave a Reply