திறன்கள் நிறைந்த தலைமுறை’ என்ற கருப்பொருளில் “Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (02) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமானது.

உலக பொருளாதாரத்திற்கும் தொழிற் சூழலுக்கும் ஏற்ற திறமையான மனித வளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் திறன் விருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

மொத்த வேலையற்ற மக்களில் 70% திறமையற்ற தொழிலாளர் பிரிவில் உள்ளனர். பயிற்சிகளின் ஊடாக அவர்களை தொழில் தேவைக்கு பொருந்தக்கூடிய திறன்களைக் கொண்ட பிரிவினராக மாற்ற வேண்டும். “Skills”  ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் பாடசாலை கல்வியை விட்டுச் செல்லும் இளைஞர்களுக்கும் வேலையற்ற அல்லது திறமையற்ற தொழிலாளர்களுக்கும் நாடளாவிய ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் வலையமைப்பொன்றை வழங்குகிறது. திறன் விருத்தி பயிற்சிகள் 08 துறைகளில் நீண்ட மற்றும் குறுகிய கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

பரீட்சையில் தோல்வியுற்றாலும் வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு …

                                                             பிரதமர் தெரிவிப்பு

“Skills” ஸ்ரீலங்கா உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ .4,000 / – உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

நடமாடும் தொழிற்பயிற்சி பிரிவுகளாக வடிவமைக்கப்பட்ட ஐந்து பேருந்துகள் இந்த திட்டத்துடன் இணைந்ததாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபடுத்தப்படும்.

ஜனாதிபதி அவர்கள் தேசிய பயிலுனர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை  தலைவரிடம் இந்த பேருந்துகளை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல Skills”  ஸ்ரீலங்கா செய்தித்தாளின் முதற் பிரதியை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி வைத்தார். தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஆடைகளை பிரதமர் அவர்கள் வழங்கி வைத்தார்.

எந்தவொரு பரீட்சையில் தோல்வியுற்றாலும், எதிர்கால சந்ததியினரை வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று இங்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். நாட்டின் இளைஞர்களை உலகின் தொழில்சார் திறன்களையும் வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு ஏற்ற தொழில் அறிவையும் கொண்டவர்களாக மாற்றும் பொறுப்புடன் செயற்பட்டுவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திற்கு தனியார் துறையின் பங்களிப்பை குறிக்கும் முகமாக Pizza Hut மற்றும் Orange  நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதங்களை இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவிடம் கையளித்தன.

இந்நிகழ்ச்சியில் மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 2021.03.02

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.