எதிர்காலங்களில் 4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலை கல்விக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வயதை பூர்த்தி செய்த சிறார்களுக்கு எதிர்காலங்களில் Pre grade என்ற வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலையில் தரம் 13ல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சையை தரம் 10ல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும் என்பதுடன், இளம் பட்டதாரிகளை உருவாக்குவது காலத்தின் அவசியமாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி காரியாலங்களின் எண்ணிக்கை நூறில் இருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலைகளை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தவும் புதிய கல்வி சீர்த்திருத்தின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”