உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில் அணியும் குரோயேசியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணியினரும் சம நிலையில் இருந்ததால் பெனால்டி சூட்- அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டு குரோயேசியா அணி வெற்றி பெற்றது. கடந்த உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதி போட்டிகளையும் குரோஷியா பெனால்டி சூட் அவுட்டிலேயே வென்றிருந்தது. மேலும், அரையிறுதி போட்டியை கூட எக்ஸ்ட்ரா டைமில்தான் வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியையும் பெனால்டி சூட் அவுட்டிலேயே குரோஷியா வென்றிருந்தது.

சர்வதேச போட்டிகளில் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்துள்ளார். நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணிக்காக தனது 77வது கோலை அடித்தார், நெய்மர். ஆட்டத்திற்கு பின்னர், நெய்மர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் இன்னும் குழப்பத்திலேயே உள்ளேன், தெளிவாக சிந்திக்க முடியவில்லை. ஒருவேளை, நான் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடலாம், விளையாடாமலும் போகலாம். பயிற்சியாளர்கள் மாறுவார்கள், அந்த பயிற்சியாளர் என்னை விரும்புவாரா என்று தெரியவில்லை.” என கூறியுள்ளார்.

அர்ஜென்டினா அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையேயான காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 மஞ்சள் அட்டை (Yellow card) வழங்கப்பட்டது. இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் அதிக மஞ்சள் அட்டை வழங்கப்பட்ட ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு 8 மஞ்சள் அட்டை மற்றும் 1 சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. அர்ஜென்டினா அணிக்கு 10 மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

உலகக் கோப்பை 2022 கால் இறுதிப் போட்டியில் பிரேசில் அணி, குரோசியா அணியிடம் பெனால்டி சூட் -அவுட் வாய்ப்பில் 1-1 (4-2 பெனால்டி கோல்கள்) என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரேசில் அணி தலைமை பயிற்சியாளர் டைட் தனது பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மற்றொரு காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணி, அர்ஜென்டினாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்தது. இதையடுத்து, நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.