நாடளாவிய ரீதியில் 2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான நேர்முகப்பரீட்சை, நாராஹேன்பிட்டியவில் அமந்துள்ள ‘நிலமெதுர’ வளாகத்தில் இன்று (13), நாளை (14) மற்றும் நாளை மறுநாள் (15) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் எவரேனுக்கும் இதுவரையிலும் அழைப்புக்கடிதம் கிடைக்காவிடின், நேர்முகப்பரீட்சை இடம்பெறும் திகதி மற்றும் நேரம் என்பவற்றை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.moha.gov.lk ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், நேர்முகப்பரீட்சைக்கு கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேர்முகப்பரீட்சைக்கு தெரிவான 4232 விண்ணப்பதாரர்களுள் 2002 பேர் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்காக தெரிவு செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”