சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, 76வது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

பாதுகாப்பு தரப்பினர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் வருகையை தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் வருகை தந்ததுடன் இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வுக்கான பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ள தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின் வருகையும் இடம்பெற்றது.

அவர்களை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி முகத்திடலுக்கு வருகை தந்தார்.

அவரை பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் ஒற்றுமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் 77 கவச வாகனங்களுடன் 3,042 இராணுவ அதிகாரிகளும், ஏனைய தரவரிசை அதிகாரிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், 7 கவச வாகனங்களுடன் 917 கடற்படை வீரர்களும் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பில் 299 காவல்துறையினரும் 209 காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் சிவில் பாதுகாப்பு படையை பிரதிநிதித்துவப்படுத்தி 379 பேரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தரைப்படையின் 179 ஆயுத வாகனங்கள் மரியாதை அணிவகுப்பில் பயன்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து முப்படையினர் மற்றும் காவல்துறையின் உத்தியோகத்தர்கள் 7,000அடி உயரத்தில் இருந்து பரசூட் ஊடாக தரையிறங்கிய சாகச காட்சி இடம்பெற்றது.

பின்னர், இறுதியாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு 76வது சுதந்திர தின நிகழ்வு நிறைவு பெற்றது.

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.