https://www.kuchchaveli.com Home | குச்சவெளி | சிறு கதைத் தொகுப்பு! – தொடர் இல 04

பாடசாலைக் காலம் முடிந்து விட்டதே என்று கதி கலங்கி நின்றாள் மாலா.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணியவள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தாள்.


மலாவின் பெற்றோர் அறநெறி பாடசாலையில் சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தனர்.


பாடசாலையை விட்டு விழகி ஒரு வாரம் கழிந்ததன் பின் அவளது வீட்டு வாசலில் யாரோ கூப்பிடும் சப்தம் கேட்க ஓடிச்சென்று யாரென பார்த்தாள் மாலா. வீட்டு வாசலில் தபாற்காரன் ஒரு கடிதத்தை காட்டி “சோம சுந்தரம் யாரும்மா? ஆ எங்க அப்பாதான் தாங்க நா குடுத்துக்கிறேன் சரிம்மா” என்று தபாற்காரன் கடிதத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
அப்பா!அப்பா! இந்தாங்கப்பா உங்களுக்கு லெட்டர் வந்திருக்கப்பா என்று தன் அப்பாவிடம் லெட்டரைக் கொடுத்தாள். கொண்டாம்மா என்னன்னு பாப்போமென்று ஆர்வத்தோடு பிரித்து படிக்களானார் மாலாவின் அப்பா.
கடவுளே! நீ என்ன கை விடல.எல்லா புகலும் உனக்கே உரித்தாகட்டும் என்று வந்த லெட்டரை தன் மார்போடு அணைத்துக் கொண்டு சந்தோஷ வெள்ளத்தில் துள்ளிக் குதித்தார் மாலாவின் அப்பா.
என்னப்பா இவ்வளவு சந்தோஷமா இருக்கிறீங்க?அப்படி என்ன அந்த லெட்டர்ல இருக்கு?குடுங்கப்பா வாசிச்சுப் பாப்போம் என்றாள் மாலா.
அது வந்து உன்ன நேர்முகப் பரீட்சைக்கு கூட்டி வர சொல்லி வந்திருக்குமா. அதாமா ரொம்ப சந்தோஷமா இருக்குமா என்றார். ஹ்ஹு….அவ்வளவு தானா??நா நினச்சே ஏதோ அப்பாக்கு அதிஷ்ட டிக்கட் விழுந்திருக்கென்டு…. சிரித்தாள் மாலா.
ஆமாம்மா இதவிட என்னமா அதிஷ்டம் வேணு நமக்கு?இதுவே பெரிய அதிஷ்டந்தானம்மா என்றார்.
சரி சரி எப்ப வர சொல்லிருக்காங்க? என்றாள் மாலா. இன்டக்கி ஏழுதானம்மா திகதி?ஆமப்பா பத்தாந்திகதி வர சொல்லிருக்காங்கமா என்றார்.
லெட்டரின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு பத்தாம் திகதி காலை பத்து மணிக்கு அறநெறி பாடசாலை நோக்கி அப்பாவும் மகளும் சென்றனர்.
வெளியே சிரித்துக் கொண்டாலும் உள் மனதில் ஏதோ ஒரு வகை கவலை அவளை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருந்தது.
மாலாவுக்கு வழங்கப்பட்ட இலக்கம் ஐந்து.அவளது பெயர் கூப்பிடப் படும் வரை அச்சத்தோடு அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் மாலாவின் பெயர் கூப்பிடப் பட்டது. பதற்றத்தோடு போய் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“மாலா”நல்ல பெயர் என்றார் நடுவராக அமர்ந்திருந்த ஒருவர் அப்போதே அவளது அச்சம் நீங்கி புன்னகைத்தாள்.
அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த நடுவர் நல்ல கெட்டிக்காரி தானம்மா ஏ தொடர்ந்து படிக்கயில்ல? என்று ஆரம்பித்தார்.
அவளை அறியாமலே கண்ணிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியது.
ஏமா என்னாச்சு ஏ அழுரீங்க?என்றார்.ஆமா நா நல்ல கெட்டிக்காரிதா எங்க அப்பாக்கு என்ன இங்க படிக்க வைக்கனும்னு ரொம்ப நாள் ஆச அதா அவங்க என்ன ஸ்கூல விட்டு நிப்பாட்டிட்டு இங்க சேர்க்க கூட்டி வந்திருக்காங்க என்றதும் ஏமா அப்போ உனக்கு இங்க படிக்க விருப்பமில்லையாம்மா? அப்பாக்கிட்ட சொல்லவாம்மா என்றார் நடுவர்.
ச்சே அப்படில்லா ஒன்னுமில்ல நா அப்பாவுக்காகவே வாழ்றவ அவங்க என்ன சொன்னாலு நா ஏற்றுக் கொள்வே.அவங்கட ஆசய நிறைவேற்றுவே கண்டிப்பா இது நடக்கு என்றாள் மாலா.
மாலாவின் பதில் கேட்டு அனைவரும் அசந்து போனார்கள். மாலாவை இன்ட்ரவியூ பன்னியவர் மிகவும் சந்தோஷப் பட்டார்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலழித்தாள் மாலா.
Ok மா நீங்க போகலாம் மீண்டும் எப்ப இங்க வரனும்னு நாங்க அறிவிப்போ மென்று அவர் கூறினார்.
வெளியில் தயக்கத்தோடு உட்கார்ந்திருந்த அப்பாவைப் பார்த்து வாங்கப்பா போகலாம் என்றாள்.என்னம்மா முடிஞ்சுதா?ஆமாப்பா முடிஞ்சுது. என்னம்மா சொன்னாங்க?என்று பதற்றத்தோடு கேட்டார் மாலாவின் அப்பா.
எல்லா Ok என்றாங்க திருப்ப எப்ப வரனும்னு சொல்வாங்களா…. தொடரும். By.MS

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.