தற்போதைய வன்முறையின் வரலாறு குறித்து அறிய ஒரு வருடத்திற்கு முன்பு பயணிக்க வேண்டும்…கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனானையே உலுக்கிய பயங்கரமான வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்தது…
துறைமுகத்தின் சேமிப்புக்கிடங்கள் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்ததில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்…
பெய்ரூட் நகரையே தரை மட்டமாக்கிய இவ்வெடி விபத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்…
உலகையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசு பொருளானது…

நகரையே போர்க்களமாக மாற்றிய இந்த துறை முக குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையானது பெரும் பதற்ற சூழலை உருவாக்கியுள்ளது…
குண்டு வெடிப்பு தொடர்பான நீதிபதி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதுதான் இந்த முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது…
இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்…மேலும் பலர் காயமடைந்துள்ளனர்…
இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி  தாரெக் பிதார் குற்றவாளிகளுடன் கை கோர்த்துக் கொண்டு பாரபட்சத்துடன் விசாரணை நடத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
இதனால் அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரும் போராட்டத்தை ஹெஸ்புல்லா மற்றும் அமல் இயக்கத்தினர் கையிலெடுத்தனர்…
கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கக் கூடிய டெயோனே பகுதி வழியாக போராட்டக் காரர்கள் சென்ற போது, கட்டடங்களின் உச்சிகளில் ஏறி நின்ற மர்ம நபர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களின் தலையைக் குறி வைத்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்…
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த லெபனான் இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்…

பல மணி நேரமாக காதைப் பிளக்கும் துப்பாக்கிச் சூடு சப்தத்தால் அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்தனர்…
ஒன்றுமறியா பள்ளிக் குழந்தைகளும் நடப்பது என்னவென்றே தெரியாது துப்பாக்கிச் சூட்டை வேடிக்கப் பார்த்துள்ளன…பிஞ்சு மனதில் வன்முறையையும் பாதுகாப்பின்மையையும் விதைத்துள்ளது இச்சம்பவம்… 
வன்முறையின் போது எங்கிருந்து தாக்குதல் நடக்கிறது என்பது தெரியாமல் மக்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்…நிகழ்விடத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டன…

இது தொடர்பாக ஹெஸ்புல்லா மற்றும் அமல் இயக்கத்தினர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாட்டை யுத்தத்தை நோக்கி நகர்த்த பயங்கரவாதக் கும்பல்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன…
அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டு, துறைமுக குண்டு வெடிப்பு வன்முறைக்கு பின்னால் இருக்கும் கும்பல், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்…
அந்நாட்டு அதிபர் நாஜிப் மிகாதி அமைதியை வலியுறுத்தியுள்ளார்…சாலைகள் முழுவதும் இராணுவத்தினர் இறக்கப்பட்டுள்ளனர்…ஆயுதமேந்தியவர்கள் யாரேனும் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால், கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…
உள் நாட்டுப் போரைப் போல பதட்டமான் சூழலிலேயே காலத்தைக் கடத்த வேண்டிய சூழலுக்கு பெய்ரூட் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்…

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.