இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் உருவெடுத்து வருகிறது. சமீப காலமாக அவ்வப்போது புதிய உச்சத்தினை தொடுவதும், பலத்த சரிவினையும் காண முடிகிறது.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தினாலும், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க முதலீட்டாளர்களின் ஆர்வத்திற்கு மத்தியில், பல சர்வதேச நாடுகளும் தற்போது பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளன.

பிட்காயின் விலை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் நிபுணர்களும் இந்த பிட்காயின் விலையானது அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். ஏனெனில் பிட்காயின் தேவை அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் தான் பல்வேறு நிபுணர்களும் பிட்காயின் குறித்து சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 21 அன்று பிட்காயின் மதிப்பு 58,000 டாலர்களை தொட்டது. பிகாயினில் பல ஆயிரக்கணக்கான முதலீடுகள் அதிகரித்த நிலையில், இது அதிகப்படியான அளவு வாங்கப்பட்டு விட்டதாக சமீபத்தில், அமெரிக்காவினை அடிப்படையாகக் கொண்ட கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ன் கிராகன் கடந்த மாதம் கூறியது. எனினும் இந்த விலை அதிகரிப்பு முடிவதற்குள் பிட்காயின் மதிப்பானது அதிகமாக உயரக்கூடும்.

இது வரவிருக்கும் மாதங்களில் 75,000 டாலர்களை தாண்டினால், அதன் சுழற்சியின் உச்சியில் இருக்கும் என்றும் கிராகன் கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 21 நிலவரப்படி பிட்காயின் மதிப்பானது 58,000 டாலர்களை தொட்டது. இது மற்ற கிரிப்டோ நாணயங்களுடன் ஒப்பிடும்போது 37% அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 66% அதிகரித்து, 48,912 டாலர்களாக வர்த்தகமாகியுள்ளது.

இதே கடந்த வாரம் கிராகனின் தலைமை செயல் அதிகாரியான ஜெஸ்ஸி பவல் இந்த வார தொடக்கத்தில், ப்ளூம்பெர்கிடம் பிட்காயின் மதிப்பு அடுத்த தசாப்தத்திற்குள் 1 மில்லியன் டாலரை எட்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

இவர் மட்டும் அல்ல, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்களும் பிட்காயின் மதிப்பு அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர்.

சமீபத்தில் டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்தார். இந்த நிலையில் பற்றிய சாதகமான செய்திகள் அவருக்கு இன்னும் நல்ல லாபத்தினையே கொடுக்கலாம்.

சமீபத்தில் டெஸ்லாவின் பங்கு விலைகள் கூட, பிட்காயின் மதிப்பு குறைந்தபோது வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

By : good return Tamil news

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.