கத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் ஒன்றை “அக்கரையில் நாம்” எனும் அமைப்பு முன் வைக்கிறது. எமது தாய் நாட்டுக்கு செல்வதற்கு அதிக பணம் வசூலிக்கிறது இலங்கை நாடு மாத்திரம் இந்த மாதம் நான்கு விமானங்கள் கட்டாரில் இருந்து இலங்கைக்கு செல்கிறது அதில் பணம் உள்ளவர்கள் மாத்திரம் செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அரபி நாட்டில் அதிகமான பணியாட்கள் குறைந்த சம்பளத்தில் இருக்கிறார்கள், குறைந்த பட்சம் 1000 ரியல்கள் மாத சம்பளமாக உள்ளது. அதாவது இலங்கை நாணய மதிப்பின் படி 53000/- ரூபாய் ஆகும். அவர்கள் எப்படி இத்தனை பணம் செலவு செய்து தாய் நாட்டுக்குச் செல்வது??

அதனை கருத்தில் கொண்டு “அக்கரையில் நாம்” என்னும் அமைப்பு ஒரு கையெழுத்து பேட்டையை இன்று (04-03-2021) ஆரம்பித்து உள்ளது. அனைவரும் இந்த கையெழுத்து பேட்டையில் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

இதனை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி நமது நிலைபாட்டை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியை தாம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து KVC யின் ஊடக முக்கியஸ்தர்கள் குறித்த இடத்துக்குச் சென்று கையொப்பத்தையிட்டு முழு ஒத்துழைப்பை வழங்கி மேலதிக தகவல்களை வினவிய போது, இவ்வமைப்பானது சுமார் 28 நாடுகளில் உள்ள தனது கிளைகளில் இந்த கையொப்ப பேட்டையை ஆரம்பித்துள்ளது எனவே இம்முயட்சி நிச்சயம் வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கட்டார் வாழ் இலங்கையர்கள் தொழிலை இழந்து உணவு உறைவிடம் இன்றி தவிக்கும் இக்கால கட்டத்தில் இலங்கை அரசு அதிகூடிய விலையில் விமான டிக்கெட்களை விட்பனை செய்வதும் ஹோட்டல் பணம் என இலட்சக்காண ரூபாய்களை அறவிடுவதும் மிகப்பெரிய அதிருப்தி நிலைக்கு இலங்கையர்களை தள்ளிவுள்ளது.

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.