ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் மற்றும் பஸ் வண்டிகளுக்கு இடையில் போட்டித் நிலைமைகளினால் விபத்துக்கள் சம்பவிப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர்அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்..

கவயீனத்துடன் சாரதி வாகனத்தை செலுத்தியமையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்த அவர் ,விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த உடல் மற்றும் சுற்றுச்சூழல் சான்றுகள் ஓட்டுநரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைக் காட்டுகின்றது என்றார். 
இவ்வாறான வாகன விபத்துக்கள் நெருக்கடியாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

மொனராகலை – பதுளை வீதியில் 13 ஆவது மைல்கல்; என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 33 பேர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 30 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பதுளை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்  கருணாரட்ன குறிப்பிட்டார்.

அவர்களில் 16 பேர் பெண்களாவர். காயமடைந்த 14 ஆண்களும் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 03 சிறார்களும் அடங்குகின்றனர்.

பலத்த காயமடைந்த இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார். 7 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்

காயமடைந்தவர்களில் ஐந்து பிள்ளைகளும் அடங்குவதாக அவர் கூறினார். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்  தெரிவித்தார்.

பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதே வேளை இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்காக தலா 55 000 ரூபா ஆயிரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 ,000 ஆயிரம் ரூபாவை ஊவா மாகாண ஆளுநர் அலுவலகமும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் வழங்கவுள்ளன. இதற்கு மேலுதிஅகமாக தலர 30 ,000 ஆயிரம ரூபா வீதம் இறுதி சடங்கு செலவுக்காக வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த பஸ் எதிரே வந்த லொரியொன்றை கடந்த செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By : Government news

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.