Pudawaikkattu Old School

புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, திரியாய் இப்படி அண்மித்த பிரதேச வாழ் மக்களில் அதிகமானவர்கள் இத்தொழிச்சலையில் பணிபுரிய பெரிதும் விரும்பும் அளவுக்கு இதனது வளர்ச்சி மற்றும் சேவை பரவலாக பேசப்படுகிறது. இல்மனைட் (ILMENITE), ரூட்டைல் (RUTILE), சிர்கோன் (ZIRCON) மற்றும் உயர் தர இல்மனைட் ( HI-TI-ILMENITE) போன்ற பிரதான நான்கு வகையான முக்கிய மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெகுவான இலாபத்தை முழு நாட்டுக்கும் பெற்றுக்கொடுக்கும் இது போன்ற பெரிய தொழிச்சலை ஓன்று எமது பிரதேசத்தில் இருப்பது எமக்கு மேலும் பெருமை சேர்க்கும் விடயமாகும். ஆனாலும் வருத்தப்படக்கூடிய வகையில் புடவைக்கட்டு கிராம பகுதியில் தொடர்ச்சியாக நடந்தேறும் சில விடயங்கள் அப்பகுதி மக்களில் மனங்களை வெகுவாக பாதித்திருப்பது தெரியவருகிறது.

  1. பிரதேசத்தின் கடல் பகுதி முழுவதுமாக மனலகழ்வு இடம்பெற்றுள்ளது, ஆனாலும் அதனை மீள்நிரப்பும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இதனால் மண்ணரிப்பு பல மடங்கு அதிகரித்து கடல் நீர் கிராமத்தை மூடும் நிலை உருவாகும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
  2. பழைய பாடசாலை விளையாட்டு மைதானம் முழுவதுமாக மனலகழ்வு இடம்பெற்று முடிவுற்ற பின்னரும் வாக்களிக்கப்பட்ட மைதான புனர்நிர்மாணம் மற்றும் விளையாட்டு அரங்கம் தொடர்பில் இந்நிறுவனம் இதுவரை பாராமுகமாகவே இருந்து வருகிறது. இம்மைதானம் புனர் நிர்மாணம் செய்து தரப்படும் என குச்சவெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் அவர்களுக்கு எழுத்து மூலம் வாக்களிக்கப்பட்ட பிரதிகள் குச்சவெளி பிரதேச செயலாளர் உட்பட பல அரச தரப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தப்பயனும் இதுவரை கிட்டவில்லை!
  3. கிராமத்தின் ஒரு அடையாளமாகவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரலாற்றுச் சின்னமாகவும் திகழும் பழைய பாடசாலை மற்றும் அதனது சுற்று வளாகம் இந்த நிறுவனத்தினால் கைப்பற்றப்பட்டு, பாடசாலை கட்டிடம் அகற்றப்படும் அபாயம் நிலவுகிறது. கட்டிடத்தை அடையாளமே இல்லாது செய்யும் ஆரம்ப வேலைகள் அவசரமாக மேட்கொள்ளப்பட்டுள்ள போதிலும் குச்சவெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் அவர்களைத் தவிர சம்பந்தப்பட்ட அரச தரப்போ பிரதேச அரசியல் பிரமுகர்களோ இது வரை அப்பிரதேச மக்களின் கண்களில் தென்படவில்லை என்பது பெரும் வேதனையை தோற்றுவிக்கிறது. அதை விட கொடுமை என்னவெனில் பாடசாலையின் பழைய மாணவர்களில் அநேகமானவர்கள் இதனை பராமரிக்கவோ பாதுகாக்கவோ முயட்சிகள் செய்யாது பாராமுகமாக இருப்பது தான் !! புடவைக்கட்டுக் கிராமத்தின் பூர்வீக முதல் பாடசாலை என்ற உயர்ந்த இடத்தை தக்கவைத்த பாடசாலையில் இது வரை எத்தனை மாணவ மாணவிகள் கல்வி கற்றிருப்பார்கள்? ஆனால் நன்றி மறந்த சுயநல மாணவர்களுக்கே நான் கற்றுக்கொடுத்துள்ளேன் என அப்பாடசாலை வெட்கி தலைகுனிந்து தனிமையில் நிட்கிறது
  4. பாடசாலை வளாகம் மற்றும் மைதானம் இரண்டுமே திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியின் இரு புறங்களிலும் அமையப்பெற்றுள்ளதால் மண்ணகழ்வின் பின்னர் இந்த வீதி முழுமையாக சேதமடையும் அபாயமும் காணப்படுகிறது. எனவே இந்நிறுவன பொறுப்புதாரிகளிடம் தயவாக கேட்டுக்கொள்வது எமது சமூகத்தின் கல்விசார் அடையாளத்தை தயவு செய்து அழித்துவிடாதீர்கள்!

குச்சவெளி, புல்மோட்டை மற்றும் திருகோணமலை அரசியல் பிரமுகர்கள் ! தயவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க முயட்சி செய்யுங்கள் !!

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.