கிராமசேவகர்களின் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக் குழு நேற்று ஆரம்பித்தது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பல கிராமசேவகர்கள் சிக்கியுள்ளனர்

அமைச்சின் கண்காணிப்பு குழு நேற்று முதற்கட்டமாக கொழும்பில் ஒரு பாரிய கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, 200 க்கும் மேற்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களில் அவர்கள் திடீர் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

கிராமசேவர்கள் தங்கள் கடமைகளை திறம்படச் செய்கிறார்களா அல்லது பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறார்களா என்பதைக் கவனத்தில் கொள்ள இந்த சோதனை நடத்தப்பட்டது.

நேற்று காலை 8.30 மணியளவில், இந்த குழு கொழும்பு மாலிகாவத்த, கொழும்பு கிழக்கு மற்றும் கெத்தாரம மேற்கு பகுதிகளில் உள்ள கிராமசேவகர் அலுவலகங்களிற்கு இந்த குழு சென்றது.

பல கிராம சேவகர் அலுவலகங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தாலும், கிராம சேவககர்கள் அங்கு வரவில்லை என்பதைக் கண்டறிந்தனர். காலை 9.30 க்குப் பிறகு மட்டுமே அவர்களின் அலுவலகங்களுக்கு வந்திருந்தது. இருப்பினும், காலை 11.00 மணிக்கும் அலுவலகங்களிற்கு வராத கிராமசேவகர்களும் அடையாளம் காணப்பட்டனர்.

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் பொறுப்புகளை மீறும் இந்த கிராம சேவக அதிகாரிகள் தொடர்பான அறிக்கையை இந்த சிறப்பு குழு தொகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பொது நிர்வாக அமைச்சக செயலாளரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, இதுபோன்ற தவறான கிராம சேவகர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ்கள் மற்றும் பிற தேவைகளைப் பெற வந்த பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. சில சந்தர்ப்பங்களில், கிராம சேவகர்கள் இல்லாததால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ன்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஊழலை அரச சேவையிலிருந்து ஒழிப்பதற்கும், மேலும் திறமையான மற்றும் நேர்மையான பொது சேவையை வழங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு இது இடையூறை ஏற்படுத்துகிறது என்றார்கள்.

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.