கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக்கான Windows 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமை (OS) தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்வின் மூலம் மைக்ரோசாப்ட், Windows 11 ஆப்ரேடிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற Build 2021 மாநாட்டில் Windows 11 OS-ன் டீஸர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக தனது புதிய OS-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு தலைமை அதிகாரி பனோஸ் PC-க்கள் மற்றும் லேப்டாப்களுக்கான அடுத்த தலைமுறை ஆப்ரேட்டிங் சிஸ்டஸ்மான Windows 11-ஐ வெளியிட்டார்.

கடைசியாக கடந்த 2015 -ம் ஆண்டு ஜூலை மாதம் Windows 10-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸின் “அடுத்த தலைமுறை” என்று அழைக்கப்படும் இந்த Windows 11 அப்டேட், சிறப்பான ஒரு பெரிய மறுவடிவமைப்புடன் வருகிறது. =புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 11 புதிய அம்சங்கள், ப்ரொடக்டிவிட்டி டூல் மற்றும் மிக முக்கியமாக, நவீன PC-க்கள் மற்றும் வொர்க் ஸ்டேஷன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு க்ளட்டர் ஃப்ரீ (clutter free) லுக்குடன் இருக்கிறது.

மேலும் பெரும்பாலான யூஸர்களுக்கு எரிச்சலூட்டும் “Hi Cortana” வெல்கம் ஸ்கிரீன் மற்றும் லைவ் டைல்ஸ் உள்ளிட்டவை இல்லாமல் வெளிவந்திருக்கிறது Windows 11. வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் ரெட்மண்ட் நிறுவனம், மேக்ஒஸ் (macOS) மற்றும் க்ரோம் ஓஎஸ் (Chrome OS) போன்றவற்றிற்கு போட்டியாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. டச் எனேபிள்ட் லேப்டாப்களுக்கு சமமாக, அதன் சமீபத்திய OS இருக்க வேண்டும் என்ற கணிசமான முயற்சிகளை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது Windows 11 OS-ன் தோற்றத்தில் வெளிப்பட்டுள்ளது. தவிர தற்போது Windows 10 பயன்படுத்தி வரும் யூஸர்கள் Windows 11-ஐ இலவசமாக டவுன்லோட் செய்து தங்களது புதிய இன்டர்பேஸாக (interface) பயன்படுத்தி கொள்ளலாம்.

புதிய அப்டேட்டை வழக்கமான அப்டேட் முறையிலேயே யூஸர்கள் செய்து கொள்ளலாம். யூஸர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் Windows10, புதிய ஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகி தகுதி உள்ளதா என்பதை pc health check மூலம் அறிந்து கொள்ளலாம். http://window.com/ வெப்சைட்டிற்கு சென்று அப்டேட் செய்யலாம். இது ஒரு ஃபிரெஷ் செட்டப் ஸ்கிரீனில் துவங்கி அனைத்து முக்கிய விண்டோஸ் எலிமெண்ட்டிற்கும் ஒரு புதிய தோற்றம் மற்றும் உணர்வையும் தருகிறது. சமீபத்தில் வெளியான iPadOS போலவே மெனுக்கள் மற்றும் விண்டோஸ்களில் ரவுண்ட் கார்னர்கள் உள்ளன. மேலும் நவீன அனுபவத்தை யூஸர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்ட ஸ்டார்ட் மெனுவை (Start menu) Windows 11 OS ன் நடுவில் காண முடிகிறது.

இதுவரை இடது பக்கத்தில் இருந்த ஸ்டார்ட் மெனு, புதிய OS-ல் நடுவே கொடுக்கப்பட்டிருப்பது முற்றிலும் புதுமையான அனுபவத்தை தருகிறது. லுக்கை மெருகூட்ட புதிய தீம்கள் மற்றும் வால்பேப்பர்களையும் மைக்ரோசாப்ட்டின் Windows 11 கொண்டு வருகிறது. விண்டோஸ் 11 ஒரு புதிய செயல்பாட்டிற்கு ‘ஸ்னாப் லேஅவுட்’ என்று பெயரிட்டுள்ளது. இது அடிப்படையில் மினிமைஸ்-மேக்ஸிமைஸ் பட்டனில் இருக்கும். ஸ்கிரீனின் பல்வேறு பொஷிஷன்களில் ஆட்டோமேட்டிக்காக ஒரு tab-ஐ வைக்க யூஸர்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆப்பிளின் மேக்புக்-ஐ போல் தோற்றமளிக்கும் Windows 11-ன் டாஸ்க் பார், கீழ் பகுதியில் காணப்படுகிறது. மேலும் டச் முறைக்கு ஏற்றவாறு ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது. மைக்ரோசாப்ட் Windows 11 ஆப்ரேடிங் சிஸ்டமில் இரண்டு செயலிகளை ஒரே நேரத்தில் யூஸர்கள் பயன்படுத்த முடியும்.

உற்பத்தி திறனைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் Windows 11-ல் டீஃபால்ட்டாக டீம்ஸ் வீடியோ கான்ஃபரன்சிங் ஆப்பை (Teams video conferencing app) ஒருங்கிணைத்துள்ளது. PC மற்றும் கனக்டட் டிவைஸ்களில் யூஸர்கள் தடையற்ற செயல்திறனை அனுபவிக்க இது அனுமதிக்கும்.வலது புறத்தில் இருந்து புதிய ஸ்கிரீனை பாப்ஸ் செய்யும் விட்ஜெட்ஸ் பட்டனும் (Widgets button) உள்ளது. மைக்ரோசாப்ட் ஸ்டோர் புதிய தோற்றம் மற்றும் இன்டர்பேஸ் அப்டேட்டை பெறுகிறது. மிக முக்கியமாக டெவலப்பர்கள் இப்போது Win32, PDA மற்றும் பல வடிவங்களில் ஆப்களை அப்லோட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெவலப்பர்களிடமிருந்து எந்த கமிஷனையும் எடுக்க மாட்டோம் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. இது அடோப் போன்ற டெவலப்பர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும்.

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.