குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய சமன் ஏக்கநாயக்க, தற்போது ஜனாதிபதி செயலகமாக இருக்கும் பழைய பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வாறான இளம் தலைமைத்துவம் உருவாகும் என நம்புவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எதிர்கால சந்ததியினர் உறுதிபூண வேண்டும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இதன்போது தெரிவித்தார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த குஷானி ரோஹணதீர அவர்கள், ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்கு அமைய இளைஞர்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பங்கேற்க அனுமதித்தல் மற்றும் அவர்களது முன்மொழிவுகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் குழு அறிக்கைகளில் உள்ளடக்குவதற்கு அனுமதி வழங்கிய முதலாவது பாராளுமன்றம், இலங்கைப் பாராளுமன்றமாகும் எனத் தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்றம் உட்பட இவ்வாறான வேலைத்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகின்றது என பணியாட்தொகுதியின் தலைவரும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். அத்துடன், அவர் நடத்திய கேள்வி-பதில் அமர்வில் மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அதிகாரிகள் மற்றும் அதிதிகளால் ஆழமான பதில்கள் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன குருநாகல் மலியதேவ மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, பல்வேறு ஊடகங்களில் காட்டப்படுவதற்கு அப்பால் பாரிய சட்டமியற்றும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் இடம்பெறுவதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவர்களை பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறும் உதவிச் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்தார்.

இலங்கை வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களுக்கு அடைக்கலம் கொடுத்த சட்டவாக்கக் கட்டடமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த விவாதத்தை நடத்துவது மாணவர்களுக்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என குருநாகல் மலியதேவ கல்லூரியின் அதிபர் W.M.C.K. மஹமிதாவ தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க, பொதுமக்கள் சேவை அதிகாரிகளான துமிந்த விக்ரமசிங்க, ரிஷ்மியா நூட்டான், பி. ருத்ரகுமார் மற்றும் பொதுமக்கள் சேவை ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

By JF

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”