ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 . தொழில் பயிற்சித் திட்டம் – 7 மில்லியன் யூரோ இளைஞர்களுக்காக அவர்களின் கோரிக்கைக்கு அடிப்படையிலான தொழில் பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

2 . சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அபிவிருத்தித் திட்டம் – 3.5 மில்லியன் யூரோ இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு சர்வதேச சந்iதையில் நிலவும் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வசதிகளை செய்துகொடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
 3. கல்வி மற்றும் மேலாண்மை நிபுணத்துவ நிதி– 0.5 மில்லியன் யூரோ புதிய திட்டங்களை வகுக்கும்போது தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சிறிய அளவிலான திட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கும், ஜேர்மன் நிபுணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். தொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பல வழிகளில் பங்களிப்பு செய்து தொழில் நுட்பம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஜேர்மன் அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

மேற்படி விடயங்களுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று நிதி மற்றும் கொள்ளை அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர், திரு.எஸ்.ஆர்.ஆடிகல இலங்கையின் சார்பிலும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவர் திரு.ஜோன் ரோட் (Mr. Jorn Rohde) ஜேர்மன் அரசாங்கத்தின் சார்பிலும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அஜித் அபேசேகர மற்றும் GIZ நிறுவனத்தின் இலங்கைகான பிரதிநிதி திருமதி. கிறிஸ்டின் இயன்வ்ல்ட் (Christiane Einfeldt) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By : Lanka government news

By Admin

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.