Sir Ahmed Farook

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாம் சிறந்த சமூக சேவையாளர்களை சமூகத்திற்க்கு அடையாளம் காட்டும் முகமாக கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் இன்று நாம் சகோதரர் அஹமட் பாரூக் என்பவர் பற்றி எமது வாசகர்களுக்காக…

இவர் நிக்கவரெட்டிய எனும் இடத்தை பிறப்பிடமாக கொன்டவர் தனது இளமைக்காலம் முதல் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடு பட்டவர் என்றால் அது மிகையாகாது.

சிங்கள மொழியில் புலமை வாய்ந்த இவர் முஸ்லீம்கள் பற்றி சகோதர இனத்தவருக்கு இருக்கும் தவறான அபிப்பிராயம் அது போன்று முஸ்லீம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் போன்றவற்றுக்கு தனி மனிதனாக நின்று சமூக வலைதளங்களில் நேரலை வாயிலாக தைரியமாக உண்மைக்கு புரம்பான விடயங்களை தோழுரித்துக்காட்டியுள்ளார்.

பல எதிர்ப்புகள் வந்த போதும் தைரியமாக எதிர் கொண்டு தனது சமூகப்பணியை செய்தவர்.

அது மட்டுமன்றி தன்னால் பல்லின சமூகத்தில் வருமைக்கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களுக்கு உதவி செய்வதற்க்காக அஹமட் பாரூக் பவுண்டேஷன் எனும் ஒரு அறக்கட்டளை தொண்டு நிறுவணத்தை நிறுவினார் அதனூடாக கிராமங்கள் தோறும் தனி மனிதனாக சென்று மத வேற்றுமைகள் பாராது அனைத்து இன மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தார். நிதி பற்றாக்குறை காரணமாக அதனை தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் தற்போது அதன் செயற்பாடுகள் ஸ்தம்பித்திருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இவர் எமது சமூகத்துக்காக ஆற்றிய பங்களிப்பானது நிச்சயம் போற்றப்பட வேண்டியது சமூக சேவையாளருக்காண விருதினை பெற தகுதி வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு சமூக சேவையாளன் இந்த இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த ஒரு அன்பழிப்பு என்றே கூற வேண்டும். இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிப்பது சமூக மேம்பாட்டு அமைப்புகள் ஒன்றிங்களின் பொருப்ல்லவா? சஹோ. அஹமட் பாருக் அவர்களின் சமூகப்பணி தொடர எமது ஊடகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

A.A.Riyas.

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.